திருக்குறளின் புரட்சிகரக ்கருத்துகள்

திருக்குறளின் புரட்சிகரக் கருத்துக்கள்

பொருளின் தேவை!

பொதுவாகப்  பொருள் அழியக்கூடியது,பற்று கூடாது,என்றெல்லாம் கூறுவார்கள்.வானத்துப்பறவைகள் விதைப்பதுமில்லை,அறுவடை செய்வதுமில்லை,சேமித்துவைப்பதுமில்லை என்பார்கள்”.நிறை செல்வம் நீரிற் சுருட்டும் நெடுந்திரைகள்”என்பர் அறிவர்.நிலையாமைக்கு அது உண்மை எனினும் இருக்கும் வரை அது நிலையானது,பயனுடையது.பொருளின்றி என்ன செய்ய முடியும்?எனவே பொருளீட்டு ! என்று கட்டளை இடுகிறார் வள்ளுவர்.
”செய்க பொருளை செருநர் செருக்கறுக்கும்
எஃகதனின் கூரிய தில்"

பிறப்பின் உயர்வும் ஒழுக்கத்தேவையும்;

வேதத்தை மறந்தாலும் கற்றிடலாம் ஆனால் ஒழுக்கம் குன்றினால் பிறப்பினால் வரும் உயர்வு அந்தணர்க்குக்கெடும் என்கிறார் வள்ளுவர்.எனவே பிறப்பினால் வரும் உயர்வைவிட ஒழுக்கம் மிகத்தேவை என்கிறார்!

உண்மைத்துறவு;

இன்று ஆன்மீகம் பரப்புவதாகக் கூறும் மடத்துத்துறவிகள் கோடிகோடியாய் சொத்து வைத்துக்கொண்டு கணக்கு வழக்கோடு முடிகிறது அவர்களது வாழ்வு ஆனால் வள்ளுவர் கூறுகிறார்
“இயல்பாகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து”344.
அதாவது ஒரு துறவி செல்வம் வைத்திருந்தால் குழப்பமும் மயக்கமும் ஏற்படும் என்கிறார்.

பழியஞ்சுதல்;

சடை வளர்த்தலும் மொட்டை அடித்தலும் ஆன்மீகமாகக்கருதப்படுகிறது.ஆனால் வள்ளுவரோ உலகம் பழிக்கும் தீய ஒழுக்கத்தை விட்டு விட்டால் மூடத்தனமாகிய மேற்கண்டவற்றை செய்ய வேண்டாம் என்கிறார்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் குறள்  280.

அறம்நன்மைதரும்!

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை .அறிஞர்களால் ஆராயப்படும் இக்குறள் எளிய பொருளுடையது.அதாவது அறம் இன்பம் தரும்,அறமற்றது துன்பம் தரும் என்பதையே வள்ளுவர் கூறவருகிறார்.

பெண்ணின் பெருமை!

பெண்ணுக்கு வீடுபேறு இல்லை என்பர் புறநானுற்றில்கூட மகனில்லாத் தந்தைக்கு வீடில்லை என்ற குறிப்புண்டு(கோப்பெருஞ்சோழன்)ஆனால் பெண் வீடுபேறு பற்றிக்குறிப்பில்லை திருக்குறளில்
பெற்றால் பெறின் பெறுவர் பெண்டிர்
பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு
எனச்சிறந்த பெண்ணைப் பெற்ற கணவன் வீடுபேறு அடைவான் என்கிறார்  வள்ளுவர். கண்ணகி,காரைக்காலம்மையார் ஆகியோர் தமிழ்மரபில் தெய்வம் ஆகினரே?

காமம் சிற்றி்ன்பம் அன்று!

காதலை.காமத்தைப் பொதுவாக எதிர்ப்பர் காமத்தைச் சிற்றின்பம் என்று புறக்கணிப்பர் ஆனால் தமிழ், காதலை அன்பின் ஐந்திணை எனப் பாராட்டுகிறது காமத்தை தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு -என்று திருக்குறள் சிற்றின்பமல்ல பேரின்பத்தை விட உயர்ந்தது என்கிறது

துறவினும் இல்லறமே சிறந்தது!

பிரம்மச்சர்யம்.கிருகஸ்தம்.வானப்பிரஸ்தம்.சன்யாஸம் இவற்றில் கடையதை உயர்ந்ததாய்கூறுவர் தமிழ்மரபு இல்லறமே நல்லறமாய்க்கூறுகிறது துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை .திருவள்ளுவர்

செய்தொழில் சிறப்புணர்தல்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் -திருவள்ளுவர்,செய்கின்ற வேலைகளுக்கேற்ப சிறப்பு வேறுபடுகின்றது என்ற கருத்து சிந்திக்கத் தக்கது.முதல்வர்,அமைச்சர்,கழிவறை கழுபுவர் அனைவரும் ஒன்றா,சமமா?

உழவை உயர்த்தல்:

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் …திருவள்ளுவர். இதன்மூலம்   உழவை   உயர்வு செய்கிறார் வள்ளுவர்.உழவுத்தொழிலோ உழவர்களோ உயர்வாகக்கருதப்படவில்லை என்பதைஅறிக

வறுமை எதிர்ப்பு;

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ் உலகு இயற்றியான்_வள்ளுவர்.பிச்சை பெற்றுத்தான் இவ்வுலகில் ஒருவன் வாழ வேண்டும் என்றால் இவ்வுலகைப் படைத்தவன் துன்புற்று அழிக என்கிறார்.

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

தத்துவ நோக்கில் பாரதி

தொல்காப்பியத்தில் மெய்யியல்(தத்துவம்)