Posts

Showing posts from 2016

லியோடால்ஸ்டாயின் போரும்வாழ்வும் நூலிலிருந்து...

இதை என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை! என் ஆன்மாவின் தேடலுக்கு விடைகிடைத்தது இதோ! லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நூலில் இருந்து….              கடவுள்,உயிர்கள்,தடை,விடை என எந்தநேரமும் மனம்குழம்பியவனாய் இருந்த எனக்கு அவ்வப்போது “ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்சோதிக்கவேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி” என்றும் “நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதீர் படைகள் போல் வரும் பஞ்சமா பாதகங்கள்” என்றும் நம் தமிழ் அருளாளர்கள் கூறியவை நினைவில்வந்து ஆறுதல்தருகின்றன.அதுபோலவே லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் என்ற நூலில் ஜூலி என்பவளுக்கு மேரி என்ற புனிதமான பெண் எழுதும் பதில் கடிதம் அமைகிறது.அதிலிருந்து சில… “ஆ நம்மை ஆறுதல் செய்வதற்கு மதம் என்பது இல்லாவிட்டால் நமது வாழ்க்கையே மிகவும் துக்கமாய் போயிருக்கும்” “கிருஸ்தவ அன்பு இருக்கிறதே அடுத்தவீட்டுக்காரரை நேசி-விரோதியை நேசி என்பவைகள் ஒருவாலிபனின் அழகிய கண்கள் கற்பனையும் காதலும் கொண்ட உன்னைப்போன்ற ஒரு இளம் மங்கையிடம் தோற்றுவிக்கக் கூடிய உணர்ச்சியைவிட மிக சிலாக்யமானவை,இனிமையானவை,உயர்ந்தவை என்றே எனக்குத்தோன்றுகிறது” “நமது தெய்வீக ரட்சகர் சொல்லிய

கற்கள்: -கடம்பூரன்.

                       கற்கள்:                                -கடம்பூரன். கற்கள் எப்போது தோன்றினவோ? நெருப்புக்குழம்பிலிருந்து பிரிந்து சேர்ந்து குளிர்ந்து இருகி; ஒன்று என்றாலும் பல வடிவங்களில்,வர்ணங்களில், தன்மைகளில்; எல்லாம் நம்மைக் கவர்வதில்லை, நமக்குச் சில பிடிக்கின்றன, பிறர்க்குச்சில! எல்லாகற்களும் பயன்படுகின்றன,நம்மைச்சில கற்கள் பயன்படுத்துகின்றன; செவ்வகம்,வட்டம்,முக்கோணம்,சதுரம் என நான்குவடிகளில் வடிவங்களில் அகப்படாத கட்டற்றவை சில! சிலகரடுமுரடாய் கையில்பட்டாலே குருதிகசியச்செய்கின்றன. சில வழவழப்பாய் கூழாங்கற்களாய்! எல்லோர்க்கும் கூழாங்கற்களைப் பிடிக்கின்றது காரணம்? அவற்றின் வடிவம்,நிறம்,தண்மை; அவை புண்பட்டுப்பின் பண்பட்டிருக்கின்றன,யாரையும் காயப்படுத்துவதில்லை; சில ஸ்படிகநிறம்,சிலகருப்பு,சில பழுப்பு,சிலசிவப்பென நால்வர்ணங்களில், வர்ணங்களில் அகப்படாத சிலதும்; கற்குவியல்களுக்கு இடையே நீண்ட நாளாய் சில தர்மங்கள் சட்டதிட்டங்கள் இருந்தன; அவை அத்துமீறப்படுவதால் தங்களுக்குள் சண்டை இடுகின்றன,நான்தான் பெரிதென்று; எல்லாம் மண்ணாய்ப்போகும் காலம் உண்டு,என்றாலும் பழகியதில் பயணிக்க ஆசைப

தமிழ்மொழி,இலக்கியம்,கலை,பண்பாடு காத்தல் வழிகள்;

தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கலை தக்கவைப்பு;                             -முனைவர் ச.இரமேஷ்(கடம்பூரன்)      ஒரு மனிதன் தன் தாய்மொழியை ஏன் பாதுகாக்க வேண்டும்? என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டால், ‘தன்னுடைய அடையாளத்திற்காக, தன்னுடைய முகவரிக்காக, தன்னுடைய பாதுகாப்பிற்காக’ என்று பதில் வருகிறது. தந்தை பெயர் தெரியாதவனை அநாதை என்கிறோம். மனிதன் ஒரு சமுதாய விலங்கு எனவே அவன் சேர்ந்துவாழ்வதில் பாதுகாப்பை உணர்கிறான். தன் பாதுகாப்பிற்கு என்று சிலர் வேண்டும் என நினைக்கிறான். அவன் தன்னைப்போன்ற பொருளாதாரம், தொழில் உடையவரோடு சாதியாக ஒன்று சேர்கிறான்,அதுவும் போதாதபோது பொது எதிரிக்கு எதிராக இனமாக ஒன்று சேர்கிறான். மொழியே ஒரு இனத்தின் அடையாளம்,முகவரி. எனவே ஒரு மனிதன் தன் அடையாளத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன் தாய்மொழியைக் காக்கவேண்டும்.       இக்கட்டுரை, தமிழ்மொழி, அதன்இலக்கியம், அம்மொழிபேசும் மக்களின் பண்பாடு, அவர்களின் கலை ஆகியவற்றை எவ்வாறு அழியாமல் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுபற்றி ஆராய்கிறது.                      1.தமிழ்மொழித் தக்கவைப்பு;   மொழிகள் சாகுமா? என்றால் மொழிகள் மட்டுமல்ல க

கட்டவிழ்ப்புப் பார்வையில் வினைக்கொள்கை:

                கட்டவிழ்ப்புப்பார்வையில் வினைக்கொள்கை.                                        முனைவர் ச.இரமேஷ்,                                        உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,                                        ஶ்ரீ சங்கரா கலை,அறிவியல் கல்லூரி,                                        ஏனாத்தூர்,காஞ்சிபுரம்.       கட்டுடைத்தல் அல்லது கட்டவிழ்ப்பு (Deconstruction) என்பது ழாக் தெரிதா(Jacques Derrida-1967) என்பவரால் விளக்கப்பட்ட பின்நவீனத்துவ சிந்தனை அல்லது ஆய்வுப்பார்வையாகும்.’’இலக்கியத்தைப் பொறுத்தவரை ‘கட்டவிழ்ப்பு’ என்பது ஒருவாசிப்பு முறை. எந்தவொரு இலக்கியப்பிரதியிலும் மையம் (எதிர்) மற்றமை  என்ற இரு (எதிரெதிர்) கூறுகள்  உண்டு. ஒருபிரதியை நாம்வாசித்தவுடன் நம்மனதில் தோன்றும் முதல்கருத்து அந்த ஆசிரியரால்  பிரதியில் முன்வைக்கப்பட்ட கருத்து (மையம்) ஆகும். கொஞ்சநேரம் கழித்து நாம் அந்தப்பிரதியை ஆய்ந்துபார்க்கும்போது நமக்கு அந்தப்பிரதியில் ஒளிந்திருக்கும் வேறுகருத்து புலனாகும்.அந்த இன்னொரு கருத்து விளிம்பு (மற்றமை) ஆகும். ஒருவாக்கியத்தைப் பலவிதமாக நாம்புரிந்துகொள்ள  வேண்டிய கட்டாயம