Posts

Showing posts from August, 2018

பிறப்பும் இறப்பும்!

Image
ஒரு புல்வெளியில் எத்தனைப்புற்கள் புதிதாக முளைக்கின்றன? எத்தனை  இறக்கின்றன?யார் அறிவார்?பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே அவை என்னதான் வாழ்ந்துவிடுகின்றன?உண்ணலும் இனம்பெருக்கலும் அன்றி,அவை உலகில் தோன்றிய காலந்தொட்டு அவை அப்படித்தான் இருக்கின்றன; சரி, மனிதனின் வாழ்க்கையில் என்ன புதுமை?மனிதன் பெரும்பாலும் இப்படித்தானே வாழ்ந்து மடிகிறான்?சிலர் மட்டுமே மனிதவாழ்வை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகிறார்கள்.புதியன செய்கிறார்கள்,பொருள்களை இன்னும் மேம்படுத்துகிறார்கள்,வாழ்வை எளிதாக்குகிறார்கள்.இவை எல்லாமே மனிதனின் புறவாழ்வை மேம்படுத்துகின்றன.அகவாழ்க்கையை மேம்படுத்த என்ன செய்கிறோம்?என்ன செய்யவேண்டும்?மீண்டும் எண்ணுவோம்!