மனிதர்களை அறிய வள்ளுவம் காட்டும் வழிகள்; முனைவர் ச.இரமேஷ், உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, ஸ்ரீசங்கரா கலை,அறிவியல் கல்லூரி, ஏனாத்தூர்,காஞ்சிபுரம்-631561. முன்னுரை; ‘மனம்’ உடையவனே ‘மனிதன்’ ஆகிறான், இதைத்தான் தொல்காப்பியர், ’’ஆறறிவதுவே அவற்றொடு மனனே’’ என்றும் ‘’மக்கள்தாமே ஆறறிவுயிரே’’ என்றும் குறிப்பிடுகிறார். -(பொருளதிகாரம்-இளம்பூரணம்,நூற்பாக்கள்-571,577). மனிதன் என்ற சொல்லுக்கு மக்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார், தொல்காப்பியர்.மனிதன்,மானுடன் இரண்டும் ஒரே பொருள் கொண்ட சொற்களாகும்.’மேம்பாடு’ என்பதற்கு ‘மேன்பாடு’ என இராட்லர் அகராதியும்,தமிழ் லெக்சிகன் ‘சிறப்பு’ எனவும் மதுரைத்தமிழ்ப்பேரகராதி ‘உயர்தல்’,’சிறத்தல்’,’மேலாதல்’ எனவும்,க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதி ‘இருக்கும் நிலையிலிருந்து அடையும் மேலான நிலை’ எனவும் பொருள் கூறுகின்றன.எனவே மானுட அல்லது மனித மேம்பாடு என்பதற்கு ‘தற்போதுள்ள நிலையைவ