வலைப்பூ அறிமுகம்-"அழியாச்சுடர்கள்"(azhiyasudargal.blogspot.in)
வலைப்பூ; ‘’அழியாச்சுடர்கள்’’- அமைப்பும் பயனும்; முனைவர் ச.இரமேஷ், உதவிப்பேராசிரியர், சங்கரா கலை,அறிவியல்கல்லூரி, ஏனாத்தூர்,காஞ்சிபுரம். முன்னுரை; ‘’ அழியாச்சுடர்கள் ‘‘என்ற தமிழ் வலைப்பூ (azhiyasudargal.blogspot.in),தமிழின் அழியாத சுடர்களாகிய நவீன இலக்கியப்படைப்பாளிகளை அறியவும் அவர்களது இலக்கியப்படைப்புகளைக் குறிப்பாகச் சிறுகதைகளை,குறுநாவல்களைப் படிக்கவுமான அரியவாய்ப்பைத் தருகிறது. அதன் ஒருபகுதியாக உள்ள ‘’உலக இலக்கியம்’’ என்ற பிரிவில் நவீன ஆங்கில இலக்கியங்கள்(சிறுகதைகள்,குறுநாவல்கள்) தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்கவாய்க்கின்றன.ஓர் இலக்கிய ஈடுபாடு கொண்ட படிப்பாளன் இந்த வலைப்பூவைக் கண்டால் புதையலைக்கண்டாற்போல் பூரிப்படைவான்.அத்தகைய வலைப்பூவின் அமைப்பையும் பயனையும் இக்கட்டுரை ஆராய்கிறது. வலைப்பூவின் அமைப்பு; வலைப்பூவின் முகப்பில் ‘’அழியாச்சுடர்கள்’’ என்ற தலைப்பு அமைகிறது.அதன்கீழ் ‘’நவீன இலக்கியக் கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்’’ என்ற கட்டியமொழி அமைகிறது.அதற்கும் கீழே முகப்பு,பெட்டகம்,மறுப்பு(Disclaim