குமரகுருபரரின் மீக்கற்பனை
 
               குமரகுருபரரின்  மீக்கற்பனை  முனைவர் ச.இரமேஷ்.    சிற்றிலக்கியங்களின்  பொதுவான  தன்மைகளாக  மிகுதியான  கற்பனை , தனிமனிதப்புகழ்ச்சி , கடவுள்  நம்பிக்கை , எளிய  மக்கள்  பற்றிய  சித்திரிப்பு  ஆகியவற்றைக்கூறலாம் . இவற்றில்  அதீத  மீக்கற்பனையே  குமர   குருபரரிடத்தில்  விஞ்சித்தோன்றுவதாகக்  கருதலாம் .   இதனைத்தண்டி  இலக்கணத்தில்  உயர்வு  நவிற்சி  அணி  அல்லது  அதிசய  அணி  என்பர் .   ‘’ மனப்படும்  ஒருபொருள்  வனப்பு  உவந்து  உரைப்புழி   உலகவரம்பு  இகவா  நிலைமைத்து  ஆகி   ஆன்றோர்  வியப்பத்தோன்றுவது  அதிசயம் ’’1. அதாவது  எல்லை  மீறாது  ஒரு  பொருளின்  தன்மையை  ஆன்றோர்  வியக்கும்  படி  கற்பனையில்  உவமித்தலாகும் . அவ்வாறு  வெளிப்படும்  கற்பனையின்  சுவைகளை  இந்த  ஆய்வுக்கட்டுரை  வெளிப்படுத்துகிறது .   குருபக்தியின்  உச்சம் ; குமரகுருபரரின்  குருநாதர்  தருமபுர  ஆதீனத்தின்  நான்காம்  சந்நிதானமாகிய  சீர்வளர்சீர்  மாசிலாமணிதேசிகர்  ஆவார் . அவரைப்புகழ்ந்து  வணங்கிக்குமரகுருபரர்  பாடியது  பண்டார  மும்  மணிக்கோவை  என்னும்  நூலாகும் . அந்நூலில் குமரகுர...
