தத்துவ நோக்கில் பாரதி -முனைவர் ச.இரமேஷ். ‘ தத் ’ என்ற உபநிடத மகாவாக்கியத்திற்கு ‘ அது ’- அப்பரம்பொருள் என்று பெயர் . தத்துவம் என்றால் இறைவனைப்பற்றிய உண்மை எனப்பொருள் கொள்ளலாம் . பாரதி காசியில் கல்வி பயின்றவர் . ஆகையால் வேத வேதாந்தங்களில் மெய்யுணர்வு பெற்றிருந்தார் . அவரது வாழ்வும் வாக்கும் இதை மெய்ப்பிக்கக் காணலாம் . அவரது பாடல்களில் அனைத்து மதங்களையும் ஏற்று ஒரு பொதுப்பார்வை கொண்டிருந்தாலும் அவர் ஒரு அத்வைதியாக விளங்கினார் . பாரதியை விளங்கிக்கொள்ளச் சில தத்துவ விளக்கங்களை அறிந்து பின்னர் பாரதியின் பாடல்கள் வழி அவரது தத்துவ நோக்கை ஆராய்கிறது இக்கட்டுரை . வேதாந்தம் ; வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் முடிந்த முடிபான அறிவு என்று பொருள் . இது பலவாகப் பிரிந்துள்ளது . அவற்றைப் பின்வருமாறு காணலாம் . ‘ த்வைதம் ’- என்றால் இரண்டு என்று பொருள் . அதாவது இறை , உயிர்கள் ஆகியவை வேறு வேறானவை . ஒன்றல்ல என்பதே த்வைத தத்துவமாகும் . ‘ அத்வைதம் ’ - என்பது இரண்டு அற்றது அதாவது இறையும் உயிர்கள
1.”மெய்யோடு இயையினும் உயிர் இயல் திரியா”-தொல்காப்பியம்,எழுத்ததிகாரம்-நூற்பா10. இலக்கணம்;-மெய் எழுத்துக்களுடன் உயிர் எழுத்துக்கள் சேர்ந்தாலும் உயிரின் அளவு (ஓசை ஒலிக்கும் அளவு) குறையாது-இது இலக்கணம். மெய்யியல்;- உயிர் முன் செய்த ஊழ்வினைக்கு (கர்மா) ஏற்ப ஏற்ற உடலுடன் சேர்ந்தாலும் உயிரின் தன்மை மாறாது. 2.”மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே” -தொல்காப்பியம்,எழுத்ததிகாரம்-நூற்பா18 இலக்கணம்;-உயிர்மெய் எழுத்துக்களில் மெய்முன்னரும் உயிர் பின்னரும் ஒலிக்கும். மெய்யியல்;-உயிர்க்கு வடிவம் இல்லை எனவே அது கொண்ட உடலின் வழி தன்னை உணர்த்துகிறது. 3.”வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையும் காலைக் காலமொடு தோன்றும்” -தொல்காப்பியம்,சொல்லதிகாரம்,வினையியல்-நூற்பா 1 இலக்கணம்;- வினைச்சொல் ஐ,ஆல்,கு முதலிய வேற்றுமை உருபுகளை ஏற்காது,ஆராய்ந்து பார்த்தால் காலம்காட்டும். மெய்யியல்;-நாம் செய்த வினைகளுக்கு ஏற்ற நன்மை,தீமைகள் பிறரைச்சேராது நம்மையே சேரும்.அதுவும் தக்ககாலத்தில் வந்து சேரும்.இலக்கியப்பயில்வுகள்: ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்-சிலப்பதிகாரம்,தீதும் நன்றும் பிறர்தர வாரா-புறநானூறு.
Comments
Post a Comment