கற்கள்: -கடம்பூரன்.

                       கற்கள்:
                               -கடம்பூரன்.

கற்கள் எப்போது தோன்றினவோ?
நெருப்புக்குழம்பிலிருந்து பிரிந்து சேர்ந்து குளிர்ந்து இருகி;

ஒன்று என்றாலும் பல
வடிவங்களில்,வர்ணங்களில்,
தன்மைகளில்;

எல்லாம் நம்மைக் கவர்வதில்லை,
நமக்குச் சில பிடிக்கின்றன,
பிறர்க்குச்சில!

எல்லாகற்களும் பயன்படுகின்றன,நம்மைச்சில கற்கள் பயன்படுத்துகின்றன;

செவ்வகம்,வட்டம்,முக்கோணம்,சதுரம் என நான்குவடிகளில் வடிவங்களில் அகப்படாத கட்டற்றவை சில!

சிலகரடுமுரடாய் கையில்பட்டாலே குருதிகசியச்செய்கின்றன.
சில வழவழப்பாய் கூழாங்கற்களாய்!

எல்லோர்க்கும் கூழாங்கற்களைப் பிடிக்கின்றது காரணம்? அவற்றின்
வடிவம்,நிறம்,தண்மை;

அவை புண்பட்டுப்பின் பண்பட்டிருக்கின்றன,யாரையும் காயப்படுத்துவதில்லை;

சில ஸ்படிகநிறம்,சிலகருப்பு,சில பழுப்பு,சிலசிவப்பென நால்வர்ணங்களில், வர்ணங்களில் அகப்படாத சிலதும்;

கற்குவியல்களுக்கு இடையே நீண்ட நாளாய் சில தர்மங்கள் சட்டதிட்டங்கள் இருந்தன;

அவை அத்துமீறப்படுவதால்
தங்களுக்குள் சண்டை
இடுகின்றன,நான்தான் பெரிதென்று;

எல்லாம் மண்ணாய்ப்போகும் காலம் உண்டு,என்றாலும் பழகியதில் பயணிக்க ஆசைப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

தத்துவ நோக்கில் பாரதி

தொல்காப்பியத்தில் மெய்யியல்(தத்துவம்)