எள்+நெய்=எண்ணை,கடலை நெய்,எள் நெய்,தேங்காய் நெய் என்றுதான் கூறவேண்டும்.கடலை எண்ணை என்று கூறக்கூடாது,கூறினால் கடலையும் எள்ளும் கலந்த கலப்பு எண்ணை என்றாகிவிடும்.
மாத்தாடு என்ற கன்னட, தெலுங்குச்சொல் மாட்லாடு என்றும் கூறப்படுகிறது. தமிழில்'' மாற்றம்''-என்ற சொல்லுக்கு ''சொல்'' என்று பொருள்.''மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே'', ''மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்'' ஆகியவை திருவாசகங்கள் ஆகும்.''மொழிதருமாற்றம்''-என்பது திருவாலவாயுடையாரின் திருமுகப்பாசுரம் ஆகும். இவை கொண்டு இது தமிழ்ச்சொல் என அறியலாம். அதிகமாகப் பேசுபவரை ''வாயாடி'' என்று அழைப்போம். இதன் அடிப்படையில் மாற்றம் ஆடுதல் என்றால் சொல்லாடுதல்,பேசுதல்,பதில் கூறுதல் ஆகிய பொருள்கள் வருவதைக்காணலாம். இப்பொழுது மாற்றம் ஆடுதல் எப்படி மாத்தாடு ஆனது எனப்பார்ப்போம்.'சில்லரை மாற்றிக்கொண்டு வா'-என்பதற்குப்பதில் 'மாத்திக்கொண்டு வா' எனக்கொச்சையாகச் சொல்வதே தமிழ் பேச்சு மொழியாகும். இந்த அடிப்படையில் மாற்றாடு என்ற சொல் மாத்தாடு எனக்கொச்சையாக வழங்கிற்று. எனவே மாத்தாடு என்ற சொல் தமிழே ஆகும்.மாத்தாடு-மாட்லாடு ஆகியவை ஒரே சொற்களே என்பது ...
தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கலை தக்கவைப்பு; -முனைவர் ச.இரமேஷ்(கடம்பூரன்) ஒரு மனிதன் தன் தாய்மொழியை ஏன் பாதுகாக்க வேண்டும்? என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டால், ‘தன்னுடைய அடையாளத்திற்காக, தன்னுடைய முகவரிக்காக, தன்னுடைய பாதுகாப்பிற்காக’ என்று பதில் வருகிறது. தந்தை பெயர் தெரியாதவனை அநாதை என்கிறோம். மனிதன் ஒரு சமுதாய விலங்கு எனவே அவன் சேர்ந்துவாழ்வதில் பாதுகாப்பை உணர்கிறான். தன் பாதுகாப்பிற்கு என்று சிலர் வேண்டும் என நினைக்கிறான். அவன் தன்னைப்போன்ற பொருளாதாரம், தொழில் உடையவரோடு சாதியாக ஒன்று சேர்கிறான்,அதுவும் போதாதபோது பொது எதிரிக்கு எதிராக இனமாக ஒன்று சேர்கிறான். மொழியே ஒரு இனத்தின் அடையாளம்,முகவரி. எனவே ஒரு மனிதன் தன் அடையாளத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன் தாய்மொழியைக் காக்கவேண்டும். இக்கட்டுரை, தமிழ்மொழி, அதன்இலக்கியம், அம்மொழிபேசும் மக்களின் பண்பாடு, அவர்களின்...
Comments
Post a Comment