திருக்குறளின் புரட்சிகரக ்கருத்துகள்
திருக்குறளின் புரட்சிகரக் கருத்துக்கள் பொருளின் தேவை! பொதுவாகப் பொருள் அழியக்கூடியது,பற்று கூடாது,என்றெல்லாம் கூறுவார்கள்.வானத்துப்பறவைகள் விதைப்பதுமில்லை,அறுவடை செய்வதுமில்லை,சேமித்துவைப்பதுமில்லை என்பார்கள்”.நிறை செல்வம் நீரிற் சுருட்டும் நெடுந்திரைகள்”என்பர் அறிவர்.நிலையாமைக்கு அது உண்மை எனினும் இருக்கும் வரை அது நிலையானது,பயனுடையது.பொருளின்றி என்ன செய்ய முடியும்?எனவே பொருளீட்டு ! என்று கட்டளை இடுகிறார் வள்ளுவர். ”செய்க பொருளை செருநர் செருக்கறுக்கும் எஃகதனின் கூரிய தில்" பிறப்பின் உயர்வும் ஒழுக்கத்தேவையும்; வேதத்தை மறந்தாலும் கற்றிடலாம் ஆனால் ஒழுக்கம் குன்றினால் பிறப்பினால் வரும் உயர்வு அந்தணர்க்குக்கெடும் என்கிறார் வள்ளுவர்.எனவே பிறப்பினால் வரும் உயர்வைவிட ஒழுக்கம் மிகத்தேவை என்கிறார்! உண்மைத்துறவு; இன்று ஆன்மீகம் பரப்புவதாகக் கூறும் மடத்துத்துறவிகள் கோடிகோடியாய் சொத்து வைத்துக்கொண்டு கணக்கு வழக்கோடு முடிகிறது அவர்களது வாழ்வு ஆனால் வள்ளுவர் கூறுகிறார் “இயல்பாகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து”344. அதாவது ஒரு துறவி செல்வம் வைத்திருந்தால